Saturday, February 7, 2015

சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 27 ஆடுகளுடன் முந்தல் பகுதியில் மூவா் கைது

புத்தளம்-சிலாபம் பிரதான  வீதியில் வைத்து சட்ட விரோதமாக வேன் ஒன்றில் 27 ஆடுகளை ஏற்றிச் சென்ற மூவரை முந்தல் பொலிஸார் இன்று காலை 11.30 மணியளவில் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

புத்தளத்தில் இருந்து சிலாபத்தின் ஊடாக கெக்குனுகொலக்கை சட்ட விரோதமாக வேன் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட போது முந்தல் நகரில் வைத்து வேனை சோதனை செய்த போது வேனிலுள் 27 ஆடுகள் காணப்பட்டதாகவும்.

கைப்பற்றப்பட்ட ஆடுகள் முந்தல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்.சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாவும்.விசாரனையின் பின்னர் சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.









Disqus Comments