Sunday, February 8, 2015

இவ்வருட இறுதிக்குள் மன்னார் கடற்பரப்பிலிருந்து மசகு எண்ணெய் பெறப்படும் - இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார

இவ் வருட இறுதிக்குள் மன்னார் பிரதேசத்தின் கடற்பரப்பிலிருந்து மசகு எண்ணெய் பெறப்பட்டு எரிபொருள் தேவையினை நாம் நிறைவேற்றிக்கொள்ளலாம். எனினும் குறிப்பிட்ட காலத்துக்கே இவ் எரிபொருள் போதுமானதாக உள்ளது''. என மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்தார்.
வணாத்தவில்லு பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலத்தில் இதற்கான முயற்சிகள் போதுமானளவில் மேற்கொள்ளப்படவில்லை. நாம் தற்போது உலகளவிலான தொழிற்நுட்பத்தினை பயன்படுத்தி நாட்டுக்கு பாதிப்பேற்படாத வகையில் ஒப்பந்தங்களினை செய்து இவ் வருடத்திற்குள் நமது நாட்டிலிருந்து மசகு எண்ணெய் பெற்று நமது தேவைகளினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக தற்போது சீனா மற்றும் கொரியா உள்ளிட்ட சில நாடுகளினது கம்பனிகளிடம் பேச்சுவார்த்தை இடம் பெறுகிறது. என இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார மேலும் தெரிவித்தார்.
Disqus Comments