ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று கூடவுள்ளது.
பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
