Saturday, November 5, 2016

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கு அரசின் நற்செய்தி!

கல்விப் பொதுத்தராதர உயர்த்தர பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் டெப் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் டெப்களை கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என்றும் இதன்போது  தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கில் இடம்பெற்ற, ஜேர்மன் வர்த்தகம் தொர்புடைய ஆசிய பசுபிக் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழில்நுட்ப பிரிவில் தேர்ச்சி பெற்ற சிறப்பு பொறியியலாளர் எமக்கு தேவை. மேலும், தகவல் தொழில்நுட்பத்தை பயிற்சிவிக்கும் நிறுவனங்கள் எமக்கு தேவையாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Disqus Comments