Tuesday, May 22, 2012

வரலாற்றில் தடம் பதித்த 100 மனிதர்கள் (The Hundred)



முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 
(570-632)
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபன்னியவர்களின் பட்டியலில் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முதலாமவர். சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் இவர் ஒருவரே தாம்.

ஏளிமையான வாழ்க்கைப்படியில் துவங்கிய அன்றை உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி,அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள்.  அவர்கள் உயிர் நீத்து பதிமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்திமிக்கதும் எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகின்றது.           
                                                                      
                               
அதிகமான தலைர்கள் பண்பாடுமிக்க அரசியல் நடுநாயமாக விளங்கிய நாகரீகத்தின் கோத்தரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேந்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும் அக்காலத்தில் உலகத்தின் பின் தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ம் ஆண்டு பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள் எளிய சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டார்கள். அன்னார் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார்கள் என இஸ்லமிய வரலாறு எமக்குச் சொல்கின்றது. தம் இருபதாவது வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது.எனினும் அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோறாகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும் மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுவதையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப்பற்றி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது உண்மையான ஏக இறைவன்  அல்லாஹ் தம்முடன் பேசுகின்றான் என்றும் சத்தியத்தை பரப்புவதற்கு தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.

இதன் பின் மூன்றான்டு காலம் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் தம் நெருங்கிய தோழர்களுக்கும் துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ம் ஆண்டிலிருந்து பகிரங்கமாக போதனை செய்ய ஆரம்பித்தார்கள். மெல்ல மெல்ல தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் தொடங்கவே மக்காவின் அதிகார வர்த்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானார்கள். கி.பி. 622ம் ஆண்டில் தம் நலனுக்கு பாதுகாப்பில்லை எனக் கருதி மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கு அவர்களுக்கு கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டியது.   

இவ்வாறு அவர்கள் மதீனாவுக்கு சென்ற ஹிஜ்ரா நிகழ்ச்சிதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் திருப்புமனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவில் அவர்களைப் பின்பற்றிவர்கள் ஆதரவாளர்கள் ஏராளம். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட  செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கியது. அடுத்த  சில ஆண்டுகளில் முஹம்மத் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவோர் தொகை வேகமாய் பெருகத்துவங்கியதும் மக்காவுக்கு மதீனாவுக்குமிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் 630ம் ஆண்டில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்கு திரும்பி வந்ததும் இப்போர் ஓய்ந்தது. அரபுக் கேந்திரங்கள் இப்புதிய மார்கத்துக்கு விரைந்தது வந்து அதனை ஏற்றுக் கொள்வதை முஹம்மது அவர்களின் வாழ்வில் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன. அவர்கள் 632ம் ஆண்டு காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.   
                                                                                                                                              
அரபு நாட்டின் பதவீகள் என்னும் நாடோடிகள் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால் ஒற்றுமையின்றிäஒருவரையெருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள் நாடோடி வாழ்க்கையின்றி நிலையாக வேளான்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த பதவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன்முறையாக முஹம்மது நபி(ஸல்) அவர்களால் ஐக்கியப்பட்டு உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள் மனித வரலாற்றில் பேராச்சிரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின. அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து வடமேற்கில் கான்ஸ்டாண்டிநோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால் இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும் எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸப்பத்தேமிய பேரரசிடமிருந்து எகிப்தைக் கைப்பற்றினர். 637ல் காதிஸியாவிலும் 642ல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப்போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.  

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்கள்முஹம்மது நபி(ஸல்) அவர்களை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்யேற்றவர்களுமான அபூபக்ர், உமறுப்னுல் கத்தாப் ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள் வடஆபிரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை  வடபுலம் நோக்கித் திரும்பி ஜிப்ரால்டர் கடலிடுக்கை கடந்து ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன. கிறிஸ்தவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றியது. ஆனால் 732ல் பிரான்ஸின் மையப் பகுதி வரை முன்னேறிவிட்ட ஒரு முஸ்லிம் படை பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின்  சொல்லால் உணர்வு பெற்ற இந்த பதவீக்கள் குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக அதுவரை உலகு கண்டிராத இந்திய எல்லையிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம் அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலானார்கள்.

ஆனால் இவ்வெற்றிகள் அனைத்தும் நிலை பெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் நாயகம் அவர்களின் மார்க்கத்துக்கு விசுவாசமாக இருந்துவந்தும் கூட அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் 700 ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பின்னர் அந்த தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்தவர்கள் மறுவெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டிகளாக விளங்கிய மெஸபத்தேமியா(ஈராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆபிரிக்காவின் முழுக் கடற்கரைப்பகுதிளும் இருக்கின்றன. எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாரே இருந்தது. இப்போது ஆபிரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும் இன்னும் அதிகமான பாகிஸ்தானிலும் கூட, வட இந்தியாவிலும், இந்தோனோசியாவிலும் முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனோசியாவில் இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால் இந்திய துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்கு பெரும் தடையாகவும் இருந்து வருகின்றது.
இந்நிலையில் மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபி(ஸல்) தாக்கத்தை- செல்வாக்கை  எப்படிக் கணக்கிடுவது ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெறுகின்றார்கள்.

உலகில் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்கள் இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபி(ஸல்) அவர்களை ஏசுநாதரை விட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது எடுத்து எடுப்பில் புதுமையாக தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று:- 

கிறிஸ்தவ வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை ஏசுநாதரே இருந்தாலும் அதன் இறைமையியலை (வுhநழடழபல) உருவாக்கியதில் முதன்மையானவரும் அதன்பால் மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்(ளுவ. Pயரட). ஆனால் இஸ்லாத்தின் இறைமையியல்(வுhநழடழபல) அதன் அறநெறி ஒழுக்கு இயல் யாவற்றுக்கும் பொறுப்பானவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களேயாவார்கள். அன்றியும் அச்சமயத்தை  மக்களிடையே பரப்புவதில் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினைக் கொண்டிருந்தார்கள்.  மேலும் இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட திருவெளிப்பாடான குர்ஆனின் போதகரும் அவர்களேயாவார்கள்.  முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இறைவெளிப்பாடுகள் பற்றுறுதியுடனும் கடமையுணர்வுடனும் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கருத்துக்களும் போதனைகளும் கொள்கைகளும் குர்ஆனுடன் மிகவும் நெருக்கமானவை. ஆனால் ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதரங்களுடன்) எஞ்சவில்லை. கிறிஸ்தவர்களுக்கு பைபிளைப் போன்று முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்தது. குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உண்டு பண்ணிய தாக்கம் மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும் தூய பவுலும் உண்டு பண்ணிய தாக்கத்தை விட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் பேனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது:-

மேலும் ஏசுநாதரை போலில்லாமல்  முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சமயத் தலைவராக மட்டுமன்றி உலகியல் துறைகளில் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்ததை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

வரலாற்றறு நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல தவிர்க்க முடியாமல் நிகழக்கூடியவை தாம். அவற்றை நடத்துவதற்குறிய  குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட ஸ்பெயினிடம் இருந்து தென் அமெரிக்க காலனிகள் தங்கள் விடுதலையையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை. எனவே அன்னார் இல்லாமலேயே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வவெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால் இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளை விட பரப்பளவில் மிகுந்திருந்தாலும் நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப்பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.

ஆனால் அரபுகளின் வெற்றிகளோ! பெரிதும் வேறுபட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு இராக்கிலிருந்து மொரோக்கோ வரை ஒரு சங்கிலித்தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. அல்-குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும் அது அரபுமொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதீமூன்று  நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்கா வட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல்  தடுக்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த அரபு நாடுகளுக்கிடையில் கணிசமான வேறுபாடுகளும் பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும் பகுதியளவிலான இவ்வேற்றுமைக் குறைவு, இந்நாடுகளுக்கிடையில் நிலவிவரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக்கூடாது. சான்றாக 1973-74ம் எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபுநாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும, இந்துனோசியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள் மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைத் கண்கூடாகக் காண்கின்றோம். சமயத் துறையிலும் உலகியல் துறையிலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனிமனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகின்றது என நான் கருதுகின்றேன்.


                                                           
Disqus Comments