காதலுக்கு கண்ணு இல்லை என்பார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இரண்டே முக்கால் அடி உடைய ஆணும், இரண்டரை அடி உடைய பெண்ணும் செல்போன் மூலம் காதல் வயப்பட்டு இல்லற வாழ்வை தொடங்கியுள்ளனர்.
இரண்டே முக்கால் உயரம் கொண்ட அந்த காதலனின் பெயர் பன்னீர். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு முல்லைநகரில் வசித்து வரும் பன்னீர், காக்களூரில் உள்ள பர்னிச்சர் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
தனது உறவினர்களுடன் பேச ஈக்காட்டில் உள்ள டெலிபோன் பூத்திற்கு அடிக்கடி செல்வார் பன்னீர். ஒரு நாள் டெலிபோன் பூத்தில் ஈக்காடு என்.கே.நகர் 2வது தெருவில் வசிக்கும் உஷா (26) என்ற பெண்ணை பார்த்தவுடன் பன்னீர் காதல் வலையில் விழுந்துவிட்டார். காரணம், உஷாவும் இரண்டரை அடிதான். தன்னைப் போலவே உருவத்தில் ஒத்திருந்த உஷாதான் நமக்கு ஏற்ற ஜோடி என்று நினைத்த பன்னீர் அவரது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார்.
ஒரு பெண்ணின் செல்போன் என் கிடைத்தால் நாம சும்மாவா இருப்போம். பன்னீர் தினமும் உஷா பேசி காதலை வளர்த்துக் கொண்டார். சென்னையில் நடிகர் லாரன்ஸ் அறக்கட்டளையில் பணியாற்றி வரும் உஷா நான்கு ஆண்டுகளாக பன்னீரை காதலித்து வந்தார்.
பன்னீரை காதலிக்கும் விஷயம் உஷா வீட்டிற்கு தெரியவில்லை. இதனால் உஷாவுக்கு திருமண பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதனை அறிந்த உஷா பன்னீருக்கு போன் செய்து தனக்கு திருமண ஏற்பாடுகள் குறித்து பேசியுள்ளார்.
இருவரும் முடிவெடித்து வீட்டில் தங்கள் காதலை தெரியப்படுத்த முடிவு செய்தனர். இருவரும் காதலை பெற்றோர்களிடம் கூறிய போது வழக்கம்போல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாழ்ந்தால் இருவரும் சேர்ந்து வாழ்வோம், இல்லையென்றால்... என்ற முடிவுக்கு பன்னீரும், உஷாவும் வந்துவிட்டனர். காதலில் இருவரும் உறுதியாக இருந்ததால் பெற்றோர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனால் காதல் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டனர்.
இனியும் தாமதித்தால் எங்கே பெற்றோர்கள் மனம் மாறி விடுவார்களோ என்று பயந்த காதல் ஜோடிகள் உடனடியாக திருவள்ளூரில் உள்ள திருமண பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.