Friday, October 26, 2012

போயா தினத்தன்று உழ்ஹிய்யா நிறைவேற்ற வேண்டாம்: ACJU

முதலில் அனைத்து இஸ்லாமி நெஞ்சங்களுக்கும் எமது ரெட்பானா செய்திகள் சார்பாக இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி திங்கட்கிழமை போயா தினமாகையினால் உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்ற வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்துள்ளது மக்களை கேட்டுள்ளது.

மாற்று மதத்தவரின் மனதினை நோக்கடிக்காத வண்ணமும் நாட்டின் சட்டத்தினை மீறாத வகையிலும் இந்த உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அய்யாமுத் த்ஷ்ரீக்குடைய இரண்டாம் நாளான ஒக்டோபர் 29ஆம் திகதி திங்கட்கிழமை போயா தினமாக இருப்பதனால் அன்றைய தினம் உழ்ஹிய்யா கடமைகளை முற்றாக தவிர்த்து நாட்டு சட்டத்தை முற்றாக பேணி நடக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டியுள்ளது.

இதனால் பெருநாள் தினமான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்துள்ளது.
Disqus Comments