Saturday, December 1, 2012

இன்று சர்வதேச எயிட்ஸ் தினம் : 2012 இலங்கையில் 22 பேர் மரணம்

ஆள்கொல்லி நோயான இந்த எயிட்ஸ் நோய் தொடா்பான விழி்ப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வருடா வருடம் டிசெம்பம் மாதம் முதலாம் திகதி  சா்வதேச எயிட்ஸ் தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எயிட்ஸ் நோயனது பின்வரும் காரணிகளால் பரவுகவதாக ஆய்வுளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  1. பாதுகாப்பற்ற உடலுறவு
  2. மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள்
  3.  தாய்ப்பால்
  4. குழந்தை பிறப்பின் போது தாயிலிருந்து சேய்க்கு கடத்தப்படுதல் 
போன்ற பிரதான வழிகளில் எச்.ஐ.வி ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு பரவுகின்றது. 
 உலக சுகாதார அமைப்பினால், எயிட்ஸ் நோய் ´உலக பரவு நோயாக´ அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 0.7% வீதமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோய்க்கு இன்றுவரை முழுமையான மருந்து நிவாரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

2010 ம் ஆண்டு எச்.ஐ.வி தொற்றினால் உலகில் பலியானவர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியன். இது 2005ம் ஆண்டு உயிரிழந்தவர்களை விட 2.2 மில்லியன் குறைவாகும். 2010 இன் புள்ளிவிபர முடிவுகள் படி உலகில் 34 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்ந்து வருகிறார்கள். இது 2001 ஐ விட 7% அதிகமாகும். இந்தில் இந்தியாவில் 2.3 மில்லியன் பேருக்கு எச்.ஐ.வி. தொற்றிருக்கிறது.

ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்ப்வர்கள் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

உலகின் எச்.ஐ.வி தொற்றுள்ளவர்களில் 68% வீதமானோர், ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்துடன் கூடிய தெற்கு நாடுகளில் (Sub-Saharan Africa) வசித்து வருகின்றனர்.

எச்.ஐ.வி தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவோ அல்லது, முழுமையாக மீள்வதற்கோ இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற போதும், உயிரியல் விஞ்ஞானிகளின் அதற்கான தீர்வை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்கள்.

எச்.ஐ.வியை எதிர்க்கும் திறன் கொண்ட நோய் எதிர்ப்பாற்றல் குருதியணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரபல நோபல் பரிசு பெற்ற மருத்துவவியலாளர் டேவிட் பல்டிமோர், தமது பரிசோதனைகளை எலிகளில் நிகழ்த்திய போது அனுகூலங்களான முடிவுகள் பெறப்பட்டதாக கூறுகிறார்.

இன்றைய எயிட்ஸ் தினத்தில் நீங்கள் என்னென்ன செய்யலாம்?

எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை இலகுவில் புரியவைக்கும் சிவப்பு நிற எயிட்ஸ் அடையாள ரிப்பன்களை வாங்கி உங்கள் ஆடைகளில் பொருத்தி கொள்ளலாம்.

எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நடத்தும் சமூக அமைப்புக்களுக்கு நிதி உதவி வழங்கலாம். இதுவரை எயிட்ஸ் பற்றி கேள்விப்படாத ஒருவருக்கு இலகு மொழிநடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இன்றைய நாளில் நடத்தப்படும் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்று, இந்நடவடிக்கைக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இல்லத்திற்கு சென்று நன்கொடைகள் வழங்கலாம்.

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களது நீண்ட காலம் வாழ்வதற்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

இலங்கையில் எயிட்ஸ் தொற்றினால் 2012 ஆம் ஆண்டு 22 பேர் மரணமடைந்துள்ளதுடன் 1597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எயிட்ஸ் தொற்றினால் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 22 பேர் பலியானதோடு 1597 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 950 ஆண்களும் 647 பெண்களும் அடங்குவதாகவும் அந்த புள்ளிவிபர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எயிட்ஸ் தொற்றால் 2011ம் ஆண்டு இலங்கையில் 32 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Disqus Comments