Thursday, November 22, 2012

இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டன பேரணி(படங்கள் இணைப்பு)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் மாணவைப் பேரவை ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான கண்டன பேரணி இன்று காலை வெற்றிகரமாக நடைபெற்றது.

சுமார் காலை 8.30 மணயவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்டன பேரணி; ஒரு மணியாலத்திற்கு மேல் இடம் பெற்றதோடு இதில் 1500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.   குறிப்பாக இந்த பேரணியில்  மூவின மக்களும் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது பாரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதும் கடந்த இரவு சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அமைதிப்பேரணியாக மாற்றப்பட்டது. அத்தோடு கலந்து கொண்ட அனைவருக்கும் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவரும் மாணவர் பேரவையின் தலைவரும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.























Disqus Comments