Sunday, December 30, 2012

இந்தியா பெண்கள் அனைவரும் பர்தா அணியவேண்டும் - மதுரை ஆதின அருணகிரி நாதர்

பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் தனது பேச்சு குறித்து கருத்தளித்துள்ள அருணகிரி நாதர் "தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறையால் தான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக, இந்தியப் பெண்கள் அனைவரும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிய மதுரை ஆதினகர்த்தர் பரிந்துரைத்திருந்தார். அருணகிரிநாதரின் இந்தப் பேச்சுக்கு பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்து மன்னிப்பு கேட்கும் படி கோரியிருந்தது.

ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராகப் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்". என்று கூறிய அருணகிரிநாதர் முன்னர் வெள்யிட்ட பர்தா குறித்தான தனது கருத்தில் உறுதி காண்பித்துள்ளார்.
Disqus Comments