முந்தல் பொலீஸ் பிரிவுக்குற்பட்ட மதுரங்குளிப் நகரில் கொழும்பு – புத்தளம் பயணிகள் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று மாலை 01.01.2013 இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் கொழும்பிலிருந்து புத்தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் பெண்ணொருவர் மதுரங்குளி நகரில் ஒரு ஒதுக்குப்புறமாக நின்று கொண்டிருந்ததாகவும், பின்னர் ரயில் மதுரங்குளி நகரை அண்மித்த போது குறித்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணில் உடல் முற்றாக சிதைவடைந்து காணப்படுவதுடன், இது தொடர்பான விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி பெண் அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவா். திருமணத்தின் நிமித்தம் மதுரங்குளி பாலசோலை பிரதேசத்தில் வசித்து வந்தார். இவரது கணவன் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது