Thursday, August 1, 2013

20வது இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் 20ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை அடுத்து உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இந்நிலையில், இன்று புதிய இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க மாலை பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments