Thursday, August 1, 2013

பார்வையற்ற ஏழு பட்டதாரிகளுக்கு​ ஆசிரியர் நியமனம்

மாற்றுத்திறனாளிகளான பார்வையற்ற ஏழு பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாகாண பொதுச் வேவைகள் ஆணைக்குழுவினால்  அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் இந்த பட்டதாரிகள் சித்தியடைந்துள்ளதை அடுத்தே அவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள்   வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண கல்விப் பணி்ப்பாளர் எம்.ரி.எம்.நிஸாம் தெரிவித்துள்ளார்.

பிறப்பிலேயே கண்பார்வையற்ற பட்டதாரிகள் ஏழு பேருக்கு முன்னோடி நடவடிக்கையாக நேற்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டதாக மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொண்ட மாற்றுத் திறனாளிகளில் இரண்டு ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றனர்.

மாகாணத்திற்குள் தத்தமது வசிப்பிடங்களை அண்மித்த பாடசாலைகளில் சேவையாற்றும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Disqus Comments