Thursday, August 1, 2013

கலைக்கப் பட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் செப்டம்பர் 21இல்

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கையை கவனத்திற்கொண்டு, தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலின் பொருட்டு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக 81 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகளுடன் நிறைவடைந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து 129 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளின் பின்னர் வாகன பேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Disqus Comments