வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காக தாக்கல்
செய்யப்பட்ட 201 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள்
செயலகம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த
210 வேட்புமனுக்களில் 9 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 131 வேட்புமனுக்களில் ஐந்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சுயேட்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த 79 வேட்புமனுக்களில் நான்கு
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளரின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, மத்திய மற்றும் வட மாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக 3785 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.