இந்தியாவின் ராஜஸ்தானில் 3 வயது மகளை தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நஹர்கார் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். கூலித் தொழிலாளி. அவருக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது கணேஷ் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கிச் சென்றார்.
மகள் என்றும் பாராமல் அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திவிட்டு, வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டு சென்றார்.
நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் காயப்பட்டு கிடந்த சிறுமியை ஜே.கே லோனே மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் காலையில் எழுந்தபோது மகளைக் காணாமல் கணேஷின் மனைவி பொலிசில் புகார் கொடுத்தார்.
பொலிசார் கணேஷிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நஹர்கார் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். கூலித் தொழிலாளி. அவருக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது கணேஷ் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கிச் சென்றார்.
மகள் என்றும் பாராமல் அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திவிட்டு, வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டு சென்றார்.
நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் காயப்பட்டு கிடந்த சிறுமியை ஜே.கே லோனே மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் காலையில் எழுந்தபோது மகளைக் காணாமல் கணேஷின் மனைவி பொலிசில் புகார் கொடுத்தார்.
பொலிசார் கணேஷிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.