எதிர் வரும்மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்று மாகாணங்களிலும் பரவலாக ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் வடமேல் மாகாண சபைக்குரிய புத்தளம் மாவட்ட சிலாபம் தேர்தல் தொகுதியின் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேர்தல் பிரசாரக் கூட்டம் 13ம் திகதி அதாவது நாளை சிலாபம் நகரில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடு அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய அங்கத்தவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Thursday, September 12, 2013
Disqus Comments