புத்தளம், மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மூவர் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர்கள் மூவரும் நேற்று காலை பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லையென, அவர்களின் பெற்றோர்கள் நேற்று மாலை முறைப்பாடு செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
17, 16, 13 வயதுடைய மாணவர்களே காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்
பிந்திக் கிடைதகவல்களின் படி மேற்படி மூன்று மாணவா்களும் மதுரங்குளி கடையாமோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவா்களாவார்கள். இன்று காலை வரை அவா்கள் தொடா்பான எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்பதாக அறியக்கிடைத்துள்ளது.
பிந்திக் கிடைதகவல்களின் படி மேற்படி மூன்று மாணவா்களும் மதுரங்குளி கடையாமோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவா்களாவார்கள். இன்று காலை வரை அவா்கள் தொடா்பான எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்பதாக அறியக்கிடைத்துள்ளது.