சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது வீரர்கள், வீராங்கனைகள் அணியும் ஆடைகளில் “ஸிப்” பொருத்துவதற்கு 2015 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
காற்சட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஸிப்பை பயன்படுத்தி போட்டியாளர்கள் பந்தை சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளே இதற்குக் காரணம்.
டுபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, தென்னாபிரிக்க வீரர் பப் டூ பிளேசிஸ், பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்ட பின்னணியில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இப்போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டத்தின்போது, பப் டூ பிளேசிஸ், தனது காற்சட்டை பொக்கெட் பகுதியிலுள்ள ஸிப்பில் பந்தை உராய்ந்துகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்தது.
இப்போட்டியின் பின்னர் தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மொஹமட் மூஸாஜி கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச போட்டிகளில் வீரர்கள் அணியும் ஆடைகளில் ஸிப் பொருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை எத்தனை பேர் அறிவாரகள் என்று எனக்குத் தெரியவில்லை.
கிரிக்கெட் ஆடைகளில் குறிப்பாக காற்சட்டையில் ஸிப் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் 2015 ஆம் ஆண்டுவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
“தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையைப் பொறுத்தவரை நாம் இந்த காலக்கெடுவின் இலக்கை அடைவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்” எனவும் அவர் கூறினார்.
பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சுக்காக ஸிப் மூலம் பந்தை உராய்வதாக ஐ.சி.சி. கூறுகிறது.
கிரிக்கெட் விதி 42.3 இன்படி செயற்கை பதார்த்தங்கள் எதையும் பயன்படுத்தி பந்தை பளபளபாக்குவது (பொலிஷ்) தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காற்சட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஸிப்பை பயன்படுத்தி போட்டியாளர்கள் பந்தை சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளே இதற்குக் காரணம்.
டுபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, தென்னாபிரிக்க வீரர் பப் டூ பிளேசிஸ், பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்ட பின்னணியில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இப்போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டத்தின்போது, பப் டூ பிளேசிஸ், தனது காற்சட்டை பொக்கெட் பகுதியிலுள்ள ஸிப்பில் பந்தை உராய்ந்துகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்தது.
இப்போட்டியின் பின்னர் தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மொஹமட் மூஸாஜி கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச போட்டிகளில் வீரர்கள் அணியும் ஆடைகளில் ஸிப் பொருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை எத்தனை பேர் அறிவாரகள் என்று எனக்குத் தெரியவில்லை.
கிரிக்கெட் ஆடைகளில் குறிப்பாக காற்சட்டையில் ஸிப் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் 2015 ஆம் ஆண்டுவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
“தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையைப் பொறுத்தவரை நாம் இந்த காலக்கெடுவின் இலக்கை அடைவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்” எனவும் அவர் கூறினார்.
பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சுக்காக ஸிப் மூலம் பந்தை உராய்வதாக ஐ.சி.சி. கூறுகிறது.
கிரிக்கெட் விதி 42.3 இன்படி செயற்கை பதார்த்தங்கள் எதையும் பயன்படுத்தி பந்தை பளபளபாக்குவது (பொலிஷ்) தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.