Thursday, October 10, 2013

5 மாணவர்கள் துஷ்பிரயோகம்; அதிபருக்கு விளக்கமறியல்

இள வயதான 5 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய பாடசாலையொன்றின் அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதிவான் குணேந்திர குமார  முனசிங்க  உத்தரவிட்டார்.

இந்த அதிபர் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பாடசாலை மாணவர்கள் மீது இக்குற்றத்தை புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

இந்த 5 மாணவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களாவர்.
இந்த அதிபர் சட்டத்தரணி ஒருவர் மூலம் நீதிவான் முன்னிலையில் ஆஜரான போதே விளக்கமறியலில் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Disqus Comments