Tuesday, October 22, 2013

வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட 72 பேர் வைத்தியசாலையில் அனுமதி

(ad) பிலியந்தலைப் பிரதேச தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட 72 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (22) அதிகாலை இந்த வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையை அண்டியுள்ள வீடுகளில் வசிக்கும் நபர்களே வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் 32 பேர் பிலியந்தலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாயு கசிவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
Disqus Comments