இலங்கையில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படடது.
தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த
கோரிக்கையை ஏற்று இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் ஒன்றை
கொண்டுவந்தார். அதில் கூறப்படடிருப்பதாவது:
"இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் 15ஆம்
தேதி காமென்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து இம்மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ளகூடாது.
மேலும் சிங்களருக்கு இணையாக தமிழர்களும்
வாழ உரிய நடவடிக்கையை இலங்கை அரசு எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத
நிலையில் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்று
அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
பின்பு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் இத்தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.