Saturday, October 26, 2013

புத்தளம் - அனுராதபுரம் இடம்பெற்ற வேன் - லொறி விபத்தில் மூவர் பலி, நால்வா் காயம்

(NF) புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 12 ஆம் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 5.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த சீமெந்து ஏற்றப்பட்ட லொரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பெலவத்த, மாதம்பே பகுதியைச் சேர்ந்த சிலரே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Disqus Comments