சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த வீடொன்றில் தாய் தொழில் தேடி கொழும்புக்குச் சென்றிருந்த போது 18 வயதான மகளை ஆறு நாட்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய தந்தையொருவர் இறுதியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலஞ்சென்றவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
துஷ்பிரயோகத்துக்குள்ளான புதல்வி வைத்திய பரிசோதனைகளுக்காக மொனராகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி முதல் தந்தையால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட யுவதி, தாய் வீடு திரும்பியதும் அவரிடம் தெரிவித்து விடுவார் என்ற அச்சத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் சம்பவத்தை மறைத்த குடும்பத்தினர் கடந்த 24 ஆம் திகதி இது குறித்து பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.இது குறித்து மொனராகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
துஷ்பிரயோகத்துக்குள்ளான புதல்வி வைத்திய பரிசோதனைகளுக்காக மொனராகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி முதல் தந்தையால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட யுவதி, தாய் வீடு திரும்பியதும் அவரிடம் தெரிவித்து விடுவார் என்ற அச்சத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் சம்பவத்தை மறைத்த குடும்பத்தினர் கடந்த 24 ஆம் திகதி இது குறித்து பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.இது குறித்து மொனராகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.