வெளிநாட்டில் தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ள நண்பா்களுக்கு இந்த செய்தி மிகவும் பிரயோசனமாக இருக்கம் என்று நம்புகின்றோம். இது ஒரு பெரிய விடயமா? என்று சிலா் எண்ணக் கூடும். பெரிய விடயமாக இல்லா விட்டாலும் வெளியாட்டில் இருக்கும் நண்பா் Skype ஊடாக பேசும் போது கவரேஜ போதாமையினால் பல இன்னல்களை சந்தித்து வந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. இப்போது அந்தக் குறை தீா்க்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக விருதோடை மற்றும் புழுதிவயல் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் அருகே அமைக்கப்பட்டிருந்த Dailog Tower க்கு 3G வழங்கப்பட்டுள்ளது. ரெட்பானா, பரியாரி தோட்டம், விருதோடை, சேனைக்குடியிருப்பு, புழுதிவயல், மற்றும் பனையடிச்சோலை ஆகிய கிராமங்களில் எந்த தடையும் இல்லாமல் கவரேஜ் கிடைப்பதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக இனி கடல் கடந்து இருக்கும் சொந்தங்கள் எந்தத் தடையும் இன்றி தமது குடும்ப உறுப்பினா்களுடன் உறவாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.