பொதுநலவாய அரசு தலைவர்களின் மாநாட்டினை முன்னிட்டு தலைநகரில் பல்வேறு மாற்று போக்குவரத்து நடைமுறைகள் பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி பொதுநலவாய அரசு தலைவர்களின் மாநாட்டுக்காக 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புகடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் மேலதிகமாக 5000 பொலிஸார் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் றோகண தெரிவித்தார்.
பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்படும் பொலிஸார் கடமை நேர சீருடைக்கு மேலதிகமாக சிவில் உடையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவ்வப்போது பொதுநலவாய அரச தலைவர்களின் போக்குவரத்தின் நிமித்தம் பதைகள் மூடப்படும்போது அப்பாதைகள் ஊடாக பயணிப்பது முற்றாக தடை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டினை முன் னிட்டு தலைநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசேடபோக்குவரத்து நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரை யாற்றுபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த செய்தி யாளர் சந்திப்பில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்டபிரதி பொலிஸ் மா அதிபர் அனுரசேனநாயக்க, போக்குவரத்து பிரிவுகளுக்குப்பொறுப்பான சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டு போக்குவரத்து நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இதன்படி பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டு க்கான போக்குவரத்து ஒழுங்குகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அமுலிலிருக்குமென சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இந்த புதிய போக்குவரத்து ஒழுங்குகளால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது என போக்குவரத்து பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அமர சிறிசேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து புதிய பாதை ஒழுங்குகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண விளக்கமளித்தார்.
இதன்படி பொதுநலவாய அரச தலைவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வருகைதரும் போதும், மாநாட்டில் நிறைவில் திரும்பும்போதும் கட்டுநாயக்க கொழும்பு அதிகவேக பாதை, புதிய களனி பாலம், ஒருகொடவத்த சந்தி, தெமட்டகொட, பொரளை ஊடான பேஸ்லைன் வீதி, பெளத்தலோக மாவத்தை, தும்முல்ல சந்தி, பம்பலப்பிட்டி சந்தி, காலி வீதி, கொள்ளுப்பிட்டி வீதி, காலிமுகத்திடல் சுற்றுவட்டம், பழைய பாராளுமன்ற சுற்றுவட்டாரம், லோட்டஸ் வீதி, செரமிக் சந்தி, ரீகல் சந்தி, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம் முன்னாலுள்ள சுற்றுவட்டம் வரையிலான பாதைகள் அவ்வவ்போது தேவைக்கேற்ப 20 முதல் 30 நிமிடங்கள் மூடப்படவுள்ளன.
அதன்போது பொதுநலவாய அரச தலைவர்கள்போக்குவரத்துக்கு மட்டும் அந்த வீதிகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டின் பிரதான நிகழ்வு ஆரம்பமாகும். 15ஆம் திகதியும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஆரம்ப வைபவம் இடம்பெறும் தாமரை தடாகத்தை நோக்கியும் அதனையடுத்து நிகழ்வுகள் இடம்பெறவுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை நோக்கியும் இந்த போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தினத்தில் கொம்பனித்தெரு சுற்றுவட்டம் முதல் ரீகல் சந்தி, செரமிக் சந்தி, லோட்டஸ் வீதி, பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம், காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி, லிபேட்டி சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, வாசிகசாலை சுற்றுவட்டம் ஊடாக தாமரை தடாகத்தை நோக்கி அரச தலைவர்கள் பயணிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், தாமரை தடாகத்திலிருந்து நந்தா மோட்டார் சந்தி, சுதந்திர சதுக்கம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சந்தி, பெளத்தாலோகா மாவத்தையூடாக, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு பொதுநலவாய அரச தலைவர்கள் தமது இரண்டாவது அமர்வுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன்போது பொதுமக்கள் பயன்படுத்தப்பட வேண்டிய மாற்று வீதி ஒழுங்குகளையும் பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி கொம்பனி வீதியின் பொலிஸ் நிலையம் அருகிலிருந்து ரீகல் செரமிக் சந்திவரையிலும் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் பாக் வீதி சந்திவரையிலும் கன்னங்கர வீதிஇ எவ்.ஆர். சேனநாயக்க சந்தி முதல் நெலும்பொக்குன சுற்றுவட்டம் வரையிலும் வீதி போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதற்கு மேலதிகமாக தும்முல்ல சந்தியூடான போக்குவரத்தும் வான்ஸ் பிளேஸ் யூடான போக்குவரத்தும் விஜயராம வீதியின் றொஸ்மிற் பிளேஸ் சந்திவரையிலான போக்குவரத்தும் இலங்கை மன்றக் கல்லூரி வீதியும் புளஸ் வீதிஇ மயான சுற்றுவட்டம் முதல் ஜாவத்தை வரையிலான வீதியிலும் 20 முதல் 30 நிமிடங்கள் வரையில் அவ்வப்போது போக்குவரத்து தடை செய்யப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதனைவிட 16ஆம்இ 17ஆம் திகதிகளிலும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசேடமாக காலை 8.30 மணி முதல் இந்த விசேட வீதி ஒழுங்குகள் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் அவை சுமார் 11 மணி வரையில் நீடிக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இவற்றுக்கு மாற்று வீதிகளாக ஹைலெவல் வீதியூடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள் கிருலப்பனை சந்தியூடாக பேஸ்லைன் வீதிஇ பொரளைஇ மருதானை யூடாக கொழும்பு நோக்கி பயணிக்க முடியு ெமனவும் கொழும்பிலிருந்து ஹைலெவல் வீதியை ஊடறுத்து பயணிக்கும் பஸ் மற்றும் கனரக வாகனங்களும் இதே வீதி ஒழுங்கினை பின்பற்ற முடியுமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதானமாக ஹைலெவல் வீதிஇ காலி வீதி ஆகியவற்றின் போக்குவரத்து நடை முறைகளிலேயே விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அவ் ஒழுங்குகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களுக்கு அறிவிக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.