Monday, November 4, 2013

பள்ளத்தில் இருந்த கூரையை உடைத்துக் கொண்டு பாய்ந்த கார். கண்டியில் சம்பவம் (படங்கள்)

(கண்டி) வத்தேகம - குடுகல வீதியில் இன்று இடம்பெற்ற அதிர்ச்சி விபத்து.

பாதையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி பள்ளத்தில் இருந்த வீடொன்றின் கூரையை உடைத்துக் கொண்டு வீட்டினுள் விழுந்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவத்தில் காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பியதுடன், வீட்டில் அவ்வேளையில் அங்கு ஒருவரும் இல்லாமல் இருந்ததால் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டது என பிரதேசவாசிகள் ஆச்சர்யத்துடன் கூறுகின்றனர்.

*படங்கள் - தகவல் : Imtiyas Nazeem (MN)*



Disqus Comments