வாணியம்பாடி அருகே புருஷோத்தமக் குப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயிக்கு பூங்கொடி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஆறுமுகம் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை
அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேக
மடைந்து அடிக்கடி சித்ரவதை செய்து வந்தார். இதனால் கணவனை விட்டுப் பிரிந்து
பூங்கொடி தனியாக வாழ்ந்து வந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக பிரிந்து இருந்த
இருவரையும், குடும்பத்தினர் சமாதானப்படுத்தி மீண்டும் சேர்த்து வைத்தனர்.
ஆனால் மீண்டும் கணவனின் துன்புறுத்தல் தொடரவே ஆத்திரமடைந்த பூங்கொடி, கணவனை
கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வாணியம்பாடி தாலுக்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பூங்கொடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.