Thursday, May 29, 2014

லண்டன் உள்ளுராட்சி சபை தோ்தலில் அசத்திய இளைஞன் உட்பட 11 தமிழா்கள் வெற்றி

லண்டன் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் 11 தமிழா்கள் வெற்றிபெற்றுள்ளனர். லண்டனில் உள்ள 33 உள்ளுராட்சி பிரிவுகளில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் 7 உள்ளுராட்சி பிரிவுகளில் தமிழ் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரித்தானியாவிலுள்ள பிரதான மூன்று அரசியல் கட்சிகள் சார்பில் 41 தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

அவர்களில் 11 பேர் வெற்றிபெற்று உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாகியுள்ளனர்.

முக்கியமாக ஆளும் பழமைவாதக்கட்சி ( Conservative Party) சாா்பில் கிங்ஸ்டன் பகுதியில் போட்டியிட்டு கஜ் வேலுப்பிள்ளை என்ற இளைஞன் வெற்றிபெற்றுள்ளாா்.

வெற்றிபெற்றவா்களின் விபரங்கள் கீழே உள்ளன.

தொழில்கட்சி ( Labour Party)
◦செல்வநாயகன் மைக்கல் (குரொய்டன்)
◦சசிகலா சுரேஸ் (ஹரோ )
◦கிருஸ்ணா சுரேஸ் ( ஹரோ )
◦கயிருல் ஹரீமா மரிக்கார் ( ஹரோ )
◦போல் சத்தியநேசன் (ஈஸ்ட் ஹம் )
◦தேவதுறை ஜெயசந்திரன் ( றெட்பிரிச்)
◦கணா நகீரதன் ( ஹரோ )
லிபரல் ஐனநாயக கட்சி (Liberal Democratic Party)
◦யோகன் யோகநாதன் ( கிங்ஸ்டன்)
◦தய தயாளன் ( கிங்ஸ்டன்)
◦எலிசா பாக்கியதேவி மண் (ஸ்வவுத்வோக்)
கென்சவேட்டிவ் கட்சி ( Conservative Party)
◦கஜ் வேலுப்பிள்ளை என்ற இளைஞனும் வெற்றிபெற்றுள்ளாா்.

இங்கிலாந்தில் உள்ள மொத்தம் 161 உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களையும் வடஅயர்லாந்தில் 11 புதிய உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களையும் தெரிவுசெய்கின்ற தேர்தல் மே மாதம் 22ம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தல் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற அதே தினத்தில் இடம்பெற்றது.
Disqus Comments