Monday, June 2, 2014

இலங்கை அகதி இளைஞர் அவுஸ்தி­ரே­லி­யாவில் தீக்குளிப்பு

அவுஸ்தி­ரே­லி­யாவில் இலங்கை புக­லிடக் கோரிக்­கை­யாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று மெல்பேர்ன் ஜிலோங் என்னும் இடத்­தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலை இடம்­பெற்­றுள்­ள­தாக அந்­நாட்டின் குடி­வ­ரவு அமைச்சர் மொரிசன் தெரி­வித்­துள்ளார்.

 
இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அவுஸ்­தி­ரே­லி­யாவில் புக­லிடம் கோரி தீக்­கு­ளித்த 29 வய­தான இளைஞர் ஒரு­வரே இவ்­வாறு மர­ண­ம­டைந்­த­வ­ராவார்.
 
குறித்த இளைஞர் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் இலங்­கை­யி­லி­ருந்து படகு மூலம் கடந்த 2013 ஜன­வரி மாதம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு புக­லிடம் கோரி வந்­தவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ­ரு­டைய உடலில் 90 வீதம் தீக்­காயம் ஏற்­பட்­ட­தா­லேயே மரணம் சம்பவித்தாக மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
Disqus Comments