Monday, July 7, 2014

சோமாலிய பாராளு மன்றத்துக்கு அருகில் தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்:4 பேர் பலி

சோமா­லிய தலை­நகர் மொகா­டி­ஷுவி­லுள்ள பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்திற்கு அருகில் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற தற்கொலைக் கார் குண்டுத் தாக்­கு­தலில்  4 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
மேற்­படி, தற்­கொலைக் கார் குண்டுத் தாக்­கு­த­லா­னது அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தின் பிர­தான வாயி­லுக்கு வெளியே இடம்­பெற்­றுள்ளது.
பாரா­ளு­மன்ற காவ­லர்கள்காரைச்செலுத்தி வந்த தற்­கொலைக்குண்­டுதாரி மீது துப்­பாக்கிப் பிர­யோகத்தை மேற்கொண்டதையடுத்தேஅவர்குண்டை வெடிக்க வைத்­துள்ளார்.
இந்தத் தாக்­கு­தலை தாமே நடாத்­தி­ய­தாக அல்-ஷபாப் போரா­ளிகள் உரிமை கோரி­யுள்ளனர்.
2011 ஆம் ஆண்டில் தலை­நகர் மொகா­டி­ஷுவின் கட்­டுப்­பாட்டை இழந்த அல்- ஷபாப் போராளிக் குழு பல குண்டுத் தாக்­கு­தல்­களை அங்கு நடத்தி வரு­கி­றது.
அல்-கொய்­தா­வுடன் தொடர்பைக் கொண்­டுள்ள இந்தக் குழு, இஸ்­லா­மிய புனித ரமழான் மாத காலத்தில் மேலும் தாக்­கு­தல்­களை நடத்­தப்­போ­வ­தாக சூளு­ரைத்­துள்­ளது.கடந்த வார ஆரம்­பத்தில் முன்­னணி பாராளு­மன்ற உறுப்­பி­னரான அஹ்மெட் மொஹமட் ஹாயத் மொகா­டிஷு நகரில் வைத்து சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

அந்தத் தாக்­கு­த­லுக்கு அல் - ஷபாப் போராளிக்குழு உரிமை கோரியிருந்தது. அந்த ப்போராளி குழு சோமாலியாவில் இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்க போராடி வருகிறது.
Disqus Comments