இந்தியாவிலிருந்து அரிசியென வெளிப்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு
கொள்கலன்களில் இருந்த 27,000 கிலோ மஞ்சளை சுங்க வருவாய்
செயலணிக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். வரியில் 5.6 மில்லியன் ரூபாய்
மோசடி செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒறுகொடவத்தை களஞ்சியசாலையில், கடந்த 14ஆம் திகதி தூத்துக்குடியிலிருந்து வந்த இரண்டு கொள்கலன்களை சுங்க வருவாய் செயலணிக்குழுவினர் சோதனையிட்டனர்.
இந்த நிலையில், கொள்கலனில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பொருள் 37,000 கிலோகிராம் அரிசி வெளிப்படுத்திய இறக்குமதியாளர், 187,500 ரூபாவை மாத்திரம் வரியாக செலுத்தியுள்ளார்.
இந்தச் சோதனையின்போது அவற்றில் 10,000 கிலோ அரிசியும் 27,000 கிலோ மஞ்சளும் இருந்தமை தெரியவந்துள்ளது. இதனால் உண்டான வரி ஏய்ப்பு 5.6 மில்லியன் ரூபாய் எனவும் இறக்குமதியான பொருட்களில் மொத்தப் பெறுமதி 10.5 மில்லியன் ரூபாய் ஆகும்.
ஒறுகொடவத்தை களஞ்சியசாலையில், கடந்த 14ஆம் திகதி தூத்துக்குடியிலிருந்து வந்த இரண்டு கொள்கலன்களை சுங்க வருவாய் செயலணிக்குழுவினர் சோதனையிட்டனர்.
இந்த நிலையில், கொள்கலனில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பொருள் 37,000 கிலோகிராம் அரிசி வெளிப்படுத்திய இறக்குமதியாளர், 187,500 ரூபாவை மாத்திரம் வரியாக செலுத்தியுள்ளார்.
இந்தச் சோதனையின்போது அவற்றில் 10,000 கிலோ அரிசியும் 27,000 கிலோ மஞ்சளும் இருந்தமை தெரியவந்துள்ளது. இதனால் உண்டான வரி ஏய்ப்பு 5.6 மில்லியன் ரூபாய் எனவும் இறக்குமதியான பொருட்களில் மொத்தப் பெறுமதி 10.5 மில்லியன் ரூபாய் ஆகும்.