Sunday, January 4, 2015

(கட்டாயம் பகிரவும்)…ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­பது எப்­படி?

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் நான்­கு ­நாட்­களே உள்­ளன. எதிர்வரும் 8 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் 19 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்­றனர். 17 கட்­சி­களைச் சேர்ந்த வேட்­பாளர்கள் மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பா­ளர்கள் போட்­டி­யிடும் இத்­தேர்­தலில் வாக்­க­ளிப்­பது எப்­படி? என்­பதை இப்­போது பார்ப்போம். வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு முடிவடையும்.வாக்­க­ளிக்கச் செல்லும் ஒருவர் தன்னை அடை­யா­ளப்­படுத் தும் வகையில் தேசிய அடை­யாள அட்டை அல்­லது சாரதி அனு­ம­திப்­பத்­திரம் போன்ற வழ­மை­யான ஆவ­ணங்­களை எடுத்துச் செல்­லலாம். வாக்­காளர் அட்­டையை தங்­க­ளுக்கு உரித்­தான தேர்தல் சாவ­டியில் கட­மை­யி­லுள்ள அதி­கா­ரி­யிடம் ஒப்­ப­டைத்தால் அந்த அதி­காரி உங்­க­ளுக்­கானவாக்­குச்­சீட்டை வழங்­குவார்.

வாக்­காளர் அட்டை கிடைக்­கா­த­வர்கள் தமக்கு அரு­கி­லுள்ள தபால் நிலை­யத்­துக்குச் சென்று தமது ஆள­டை­யா­ளத்தை நிரூ­பிக்கும் ஆவ­ணத்தை சமர்ப்­பித்து தமக்­கான வாக்கு அட்­டையை பெற்றுக் கொள்­ளலாம்.. அல்­லது வாக்­காளர் பட்­டி­யலில் தமது பெயர் இருக் கும் பட்­சத்தில் தமக்­கான வாக்குச் சாவ­டிக்குச் சென்று ஆள­டை­யா­ளத்தை நிரூ­பித்து வாக்­குச்­சீட்டை பெற்றுக் கொள்­ளவும் முடியும். இயற்கை அனர்த்­தங்கள் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தமக்­கு­ரிய தபா­ல­கத்­துக்குச் சென்று தமக்­கு­ரிய வாக்­காளர் அட்­டையைப் பெற­மு­டியும்.

அந்த வாக்­குச்­சீட்டில் வேட்­பா­ளர்­களின் பெயர்கள் சிங்­கள அகர வரி­சைப்­படி அச்­சி­டப்­பட்­டி­ருக்கும். வாக்­கா­ளரின் பெயர்­க­ளுக்கு முன்னாள் அவர் சார்ந்த கட்­சியின் சின்னம் அச்­சி­டப்­பட்­டி­ருக்கும். சுயேச்சை வேட்­பா­ள­ரென்றால் தேர்தல் ஆணை­யா­ளரால் அந்த சுயேச்சை வேட்­பா­ள­ருக்கு வழங்­கப்­பட்ட சின்னம் அவ­ரது பெய­ருக்கு முன்னால் அச்­சி­டப்­பட்­டி­ருக்கும். வேட்­பா­ள­ரது பெயர் மற்றும் அவ­ரது சின்­னத்­திற்கு எதிரில் ஒரு வெற்றுக் கூடு காணப்­படும் அந்த கூட்டில் உங்­க­ளது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு வேட்­பா­ள­ருக்கு மாத்­திரம் வாக்­க­ளிக்க விரும்­பினால் அவ­ரது சின்­னத்­துக்கு முன்­னா­லுள்ள வெற்­றுக்­கூட்டில் X என்று புள்­ள­டி­யி­டலாம்..

வாக்குச் சீட்­டொன்றில் வாக்­கா­ள­ரொ­ருவர் தனது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்­புக்­களை அடை­யா­ள­மிட்­டி­ருக்­கா­வி­டினும் அந்த வாக்கு செல்­லுப்­ப­டி­யாகும் வாக்குச் சீட்­டாக ஏற்­றுக்­கொள்­ளப்­படும்.

வாக்குச் சீட்­டொன்றில் வாக்­கா­ள­ரொ­ருவர் தங்­க­ளது விருப்­பத்­திற்­கேற்ப மூன்று வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தனால் நீங்கள் முத­லா­வ­தாக தெரிவு செய்யும் வேட்­பா­ள­ரது பெயர் மற்றும் சின்­னத்­துக்கு முன்­னா­லுள்ள வெற்­றுக்­கூட்டில் ‘1’ என அடை­யா­ள­மிட்டும், இரண்­டா­வ­தாக தெரிவு செய்யும் வேட்­பா­ள­ரது பெயர் மற்றும் சின்­னத்­துக்கு முன்­னா­லுள்ள வெற்­றுக்­கூட்டில் ‘2’ என அடை­யா­ள­மிட்டும் மூன்­றா­வ­தாக தெரிவு செய்யும் வேட்­பா­ள­ரது பெயர் மற்றும் சின்­னத்­துக்கு முன்­னா­லுள்ள வெற்­றுக்­கூட்டில் ‘3’ என அடை­யா­ள­மிட்டும் வாக்­க­ளிக்க முடியும்.. இவ்­வாறு முறை­யாக அடை­யா­ள­மி­டப்­பட்ட வாக்­குச்­சீட்­டுகள் செல்­லுப்­ப­டி­யா­ன­வை­யாக கரு­தப்­படும்.

கீழ் கண்­ட­வா­றான வாக்­குகள் செல்­லுப்­ப­டி­யற்­ற­தாக கரு­தப்­படும்.

1. வாக்­குச்­சீட்டில் எந்­த­வொரு வாக்­கா­ள­ருக்கும் வாக்­க­ளிக்­கப்­பட்­டி­ருக்காவிட்டால்

2. ஒரு வேட்­பா­ளரை விட அதிக எண்­ணிக்­கை­யான வேட்­பா­ளர்­க­ளுக்கு X என புள்­ள­டி­யி­டப்­பட்­டி­ருந்தால்.

3. ஒரு வேட்­பா­ள­ருக்கு ‘1’ என்றும் மற்­று­மொரு வேட்­பா­ள­ருக்கு X என புள்­ள­டி­யி­டப்­பட்­டி­ருந்தால்

4. முதலாம் விருப்பு, இரண்டாம் விருப்பு மற்றும் மூன்றாம் விருப்பை விட அதி­க­மான விருப்­புகள் அடை­யா­ள­மி­டப்­பட்­டி­ருந்தால்

5. இரண்டாம் விருப்பு மற்றும் மூன்றாம் விருப்பு மாத்திரம் அடையாளமிடப்பட்டிருந்தால்

6. வாக்குச்சீட்டில் வாக்காளரை இணங்கண்டுக் கொள்ளக்கூடிய வகையில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அல்லது வரையப்பட்டிருந்தால்

7. வாக்கு அடையாளமிடப்பட்டிருப்பது எந்த வேட்பாளருக்கு என்பது குறித்து சந்தேகத்துக்குறியதாகவிருந்தால்

இந்த வாக்குகள் செல்லுபடியற்றதென கருதப்பட்டு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
நன்றி :http://madawalanews.com/
Disqus Comments