Monday, June 1, 2015

எதிா்வரும் பாராளுமன்றத் தோ்தலில் வெற்றிலை அமைச்சர்கள் 7போ் யானையில் போட்டி?

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிவகித்த ஏழுபேர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை  கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அந்த குழுவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு வேட்பு மனுவை கொடுக்காமல் விடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. வேட்பு மனுக்களை கோரியுள்ளோரில் மாத்தறை, கண்டி, திகாமடுல்ல, மாத்தளை, கேகாலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அடங்குகின்றன என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன - 
Disqus Comments