மூன்றாவது
தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட முடியுமா? என்பது
தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உயர்
நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த ஆலோசனை மனுதொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் 7 பேரைக் கொண்ட குழு நேற்று ஆராய்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் எழுத்துமூலமான சமர்ப்பணங்களை நாளை வெள்ளிக் கிழமை 3 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென்று நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடலாமா என்பது குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் தனக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கின்றார். இதனையடுத்தே, இந்த விவகாரம் தொடர்பில் 7 நீதியரசர்கள் கொண்ட குழு ஆராய்ந்துள்ளது.
1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் செய்யப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தனக்கு மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இதனையடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் நேற்று கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதத்தி்ல் ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை 3 மணிக்கு முன்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் சமர்ப்பணங்களை அனுப்பிவைக்குமாறு பதிவாளர் கோரியுள்ளார்.
பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமையவே உயர் நீதிமன்ற பதிவாளர் இக்கடிதத்தினை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் 17 ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்பட்டு 18ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் எத்தனைத் தடவை வேண்டுமானாலும் ஒருவர் போட்டியிடலாம் என்ற நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
ஆனாலும் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தத் திருத்தினை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ கொண்டுவந்தமையினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி போட்டியிட முடியாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மூன்றாவது தடவையும் தான் போட்டியிடலாமா என்பது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி கோரியிருக்கின்றார்.
ஜனாதிபதியின் இந்த ஆலோசனை மனுதொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் 7 பேரைக் கொண்ட குழு நேற்று ஆராய்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் எழுத்துமூலமான சமர்ப்பணங்களை நாளை வெள்ளிக் கிழமை 3 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென்று நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடலாமா என்பது குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் தனக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கின்றார். இதனையடுத்தே, இந்த விவகாரம் தொடர்பில் 7 நீதியரசர்கள் கொண்ட குழு ஆராய்ந்துள்ளது.
1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் செய்யப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தனக்கு மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இதனையடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் நேற்று கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதத்தி்ல் ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை 3 மணிக்கு முன்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் சமர்ப்பணங்களை அனுப்பிவைக்குமாறு பதிவாளர் கோரியுள்ளார்.
பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமையவே உயர் நீதிமன்ற பதிவாளர் இக்கடிதத்தினை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் 17 ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்பட்டு 18ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் எத்தனைத் தடவை வேண்டுமானாலும் ஒருவர் போட்டியிடலாம் என்ற நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
ஆனாலும் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தத் திருத்தினை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ கொண்டுவந்தமையினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி போட்டியிட முடியாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மூன்றாவது தடவையும் தான் போட்டியிடலாமா என்பது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி கோரியிருக்கின்றார்.
