Wednesday, October 30, 2013

கிணற்றிலிருந்து தந்தையினதும், 2 வயதான மகளினதும் சடலங்கள் மீட்பு

தந்தை ஒருவரினதும் அவருடை இரண்டு வயதான மகள் ஒருவரினதும் சடலங்கள் கிணறு ஒன்றியிலிருந்து இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.

கண்டி பன்வில பிரதேசத்தில்உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்தே மேற்படி இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

சடலமாக மீட்கப்பட்டுள்ள இரண்டு வயதான பிள்ளையின் தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்பினை பெற்றுச் சென்றுள்ளதாக விசாரனைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இது தொடா்பான மேலதிக விசாரனைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனா்.
Disqus Comments