Friday, October 25, 2013

புத்தளம் நகரில் வர்த்தகர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

(NF)புத்தளம், மன்னம்குளம் பகுதியில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, அவரிடமிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வர்த்தகர் தனது வர்த்தக நிலையத்தில் இருந்து வீடு திரும்பியபோதே  துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறுகின்றார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வர்த்தகர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் நேற்றிரவு 8.30 அளவில் வர்த்தகர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 61 வயதான வர்த்தகர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
Disqus Comments