Friday, October 25, 2013

வெளிநாட்டுகளில் தொழில் புரியும் பெற்றோர்களின் நலன்கருதி புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஏதேனும் பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்நோக்கியிருப்பின், அதுகுறித்து உடனடியாக அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களிடம் கேட்டுள்ளது.

24 மணித்தியாலமும் இயங்குகின்ற தமது அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அத்தகைய நிலைமைகளை அறிவிக்க முடியும் என பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொதுமுகாமையாளருமான மங்கல ரந்தெனிய குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 0112 87 99 00 அல்லது 0112 87 99 02 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அத்தகைய நிலைமைகளை தெரிவிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Disqus Comments