Tuesday, October 29, 2013

அம்புலன்ஸ் வண்டி மோதி வயோதிபர் பலி!- ஓமந்தை பகுதியில் சம்பவம்

அம்புலன்ஸ் வண்டி மோதியதில் வயோதிபர் ஒருவர் பலியான சம்பவம் வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில்,   ஓமந்தை பரசன்குளத்தை சேர்ந்த 72 வயதான எஸ். சொர்ணலிங்கம் என்ற வயோதிபரே பலியாகியுள்ளார் என பொலிஸார்  தெரிவித்தனர்.

மல்லாவி வைத்தியசாலையை சேர்ந்த அம்புலன்ஸ் வண்டியே ஓமந்தை பகுதியில் துவிச்சக்கரவண்டியில் வந்த வயோதிபரை மோதியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments