(vr) திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரத்தை அண்மித்த பகுதியில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் இன்று பகல் 1.15 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இவர்
கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் தனலெட்சுமி (வயது 57)
என அடயாளம் காணப்பட்டுள்ளார். சடலம் தற்போது கொட்டகலை வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர். பஸ்ஸின் சாரதியும் நடத்துனரையும் பொலிஸார் கைது செய்துள்ளமை
குறிப்பிடதக்கது.