Wednesday, November 6, 2013

75 அடி பள்ளத்தில் மோட்டார் கார் விழுந்து விபத்து (படங்கள்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கிளயார் பகுதியில் 75 அடி பள்ளத்தில் மோட்டார் கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (05) இரவு வேளையில் குறித்த கார் கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் அவர்கள் எந்தவித காயங்களும் இன்றி உயிர் பிழைத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments