2012
ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்குரிய வெட்டுப்புள்ளி இந்த வார
இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
24 ஆயிரம் மாணவர்கள் இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு
உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கழுவின் தலைவர் ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை 55 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கட்டங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இரண்டு கட்டங்களில் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஷனிகா ஹிரிம்புரேகம சுட்டிக்காட்டியுள்ளார்.
24 ஆயிரம் மாணவர்கள் இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு
உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கழுவின் தலைவர் ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை 55 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கட்டங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இரண்டு கட்டங்களில் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஷனிகா ஹிரிம்புரேகம சுட்டிக்காட்டியுள்ளார்.