Saturday, May 31, 2014

க.பொ.த.(உ/த) பரீட்சை வினாத்தாள்களை தயார் செய்யும் பேராசிரியர்கள் சிலர் நீக்கம்

கல்விப் பொது தரா­தர (உயர்­தர) பரீட்சை வினாப்­பத்­தி­ரங்­களை தயார் செய்யும் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள் சிலரை நீக்கி தனக்கு சார்­பா­ன­வர்­களை கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்த்­தன நிய­மித்­துள்­ள­தாக ஐ.தே.க.வின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் குற்றம் சுமத்­தினார்.
 
அத்­தோடு கல்­விக்­கான நிதி ஒதுக்­கீ­டு­களை குறைப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்த சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் அரசு மேற்­கொண்­டுள்ள உடன்­பா­டுகள் தொடர்­பி­லான உண்மை தன்­மையை எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரைவில் வெளி­யி­டுவார். அதே­போன்று நாட்டில் தற்­போது கல்­வித்­துறை ஊழல்கள் நிறைந்­த­தொன்­றாக மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்டிக் காட்­டினார்.
 
ஐ.தே.கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
 
அர­சாங்கம் சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் உடன்­பா­டொன்றை மேற்­கொண்டு இல­வச கல்வி முறை­யினை சீர­ழிப்­பது தொடர்­பி­லான கருத்­துக்­களை எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளி­யிட்­டி­ருந்தார்.
 
இதற்­க­மைய அர­சாங்கம் சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் உடன்­பட்டு கல்­விக்கு ஒதுக்­கப்­பட வேண்­டிய நிதித் தொகையை குறைத்து வரு­கின்­றது. ஆறு சத­வீ­த­மாக கல்­விக்கு ஒதுக்­கி­டப்­பட்ட வீத­மா­னது தற்­போது நான்கு சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.
 
அத்­துடன் பாட­சா­லை­களின் மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சினால் உரிய வகையில் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டாத கார­ணத்­தினால் பெற்­றோர்­களே தனது பிள்­ளை­களின் எதிர்­கால நல­னுக்­காக உழைத்­ததில் ஒரு பங்கை பாட­சா­லையின் மேம்­பாட்­டுக்கு செல­வி­டு­கின்­றனர்.
 
இதன் கார­ண­மாக தற்­போது நாட்டில் மின்­சார வச­திகள் நீர் வச­திகள் இர­சா­யன கூடங்கள் இல்­லாத ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பாட­சா­லைகள் இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றது. இதற்­கான மூல காரணம் அர­சாங்கம் சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் மேற்­கொண்ட உடன்­பா­டு­களே ஆகும். ஆகவே, சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள உடன்­பா­டு­களின் உண்மை தன்­மையை எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரைவில் வெளிப்­ப­டுத்­துவார்.
 
இதே­வேளை கல்விப் பொதுத்­த­ரா­தர (உயர்­தரம்) பரீட்சை வினாப்­பத்­தி­ரங்­களை தயார் செய்யும் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­களை அப்­ப­த­வி­யி­லி­ருந்து கல்வி அமைச்சர் நீக்­கி­யுள்ளார். இதற்­க­மைய பொரு­ளியல் துறை சார்ந்த வினாப்­பத்­தி­ரத்தை தயார் செய்யும் குழுவின் சிரேஷ்ட பேரா­சி­ரி­ய­ரான டெனி அத்­து­பத்­துவை நீக்­கி­ய­துடன் இன்னும் சில­ரையும் நீக்­கி­யுள்ளார்.
 
அதற்கு பதி­லாக கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்த்­தன தனக்கு சார்­பா­ன­வர்­களை நிய­மித்­துள்ளார். இலங்­கையின் பரீட்சை திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­களில் கல்வி அமைச்சு தலை­யி­டாது என்று கூறி வரு­கின்ற பந்­துல குண­வர்த்­தன, பொரு­ளியல் வினாப்­பத்­தி­ரத்­துக்­கான கேள்­விகள் தேர்வின் போது அமைச்சர் தனது கேள்விகளையும் வினாபத்திரத்தில் சேர்ப்பதற்காக பேராசிரியர்களை அச்சுறுத்தி வருகிறாராம்.
 
எனவே, தற்போது நாட்டின் கல்வி துறை ஊழல்கள் மிகுந்ததாக காணப்படுகிறது. தனியார் வகுப்பினை நடத்த கூடியவர்களை கல்வி அமைச்சர்களாக்கினால் நாட்டில் இலவச கல்வி முறைமை இல்லாதொழிக்கப்பட்டு விடும் என்றார்.
Disqus Comments