Saturday, July 12, 2014

முஸ்லிம் தீவிரவாத செயற்களை கட்டுப்படுத்துவது எமது கடமை

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்களையோ வன்­மு­றை­க­ளையோ பொது­பல சேனா அமைப்பு ஒரு­போதும் மேற்­கொள்ள வில்லை. முஸ்லிம் இன­வா­தத்தை தடுப்­பது எமது நோக்­கமே தவிர அப்­பாவி முஸ்லிம் மக்­களை அழிப்­பது எமது நோக்­க­மல்ல என்று தெரி­விக்கும் பொது­ப­ல­சேனா எமக்கு எதி­ராக எத்­தனை வழக்கு தொடர்ந்­தாலும் முகம்­கொ­டுக்க நாம் தயார் எனவும் குறிப்­பிட்­டது.

 பொது­ப­ல­சே­னாவின் பொது­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் புனித குர்­ஆனை அவ­ம­தித்­துள்ளார் என முஸ்லிம் சமய கலா­சார திணைக்களம் நீதி­மன்றில் உறுதி செய்துள்ள நிலையில் அது தொடர்பில் வின­விய போது அவ்­வ­மைப்பின் செய­லாளரும் சம்­பந்­தப்­பட்ட வ­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிடுகையில்;
பொது­ப­ல­சேனா அமைப்பு எப்­போதும் ஏனைய மதங்­க­ளையோ மதத் தலை­வர்க ளையோ அழிக்க வேண்டும் என நினைத்­த­தில்லை. நாட்­டிற்கு எதி­ராக தீய சக்­திகள் உரு­வா­வது முழு நாட்­டிற்­குமே பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும். அது பௌத்­த­னாக இருந்தாலும் இந்­து­வாக இருந்­தாலும் கிறிஸ்­த­வமோ அல்­லது முஸ்­லி­மாக இருந்­தாலும் அனை­வ­ரையும் பாதிக்கும் விட­ய­மாகும். அதே போல் இலங்­கைக்குள் ஊடு­ருவி வரும் முஸ்லிம் தீவி­ர­வாதம் மத­வாதம் பற்றி பேசி­ னோமே தவிர நாட்டில் உள்ள அப்­பாவி முஸ்­லிம்கள் தொடர்பில் நாம் ஒரு போதும் தவ­றாக பேச­வில்லை.
இந்த நாட்டின் அனைத்து இன மக்­க­ளு­டனும் ஒன்­றி­ணைந்து வாழவே நாம் நினைக்­கின்றோம். ஆனால் அதை முஸ்லிம் இன­வா­திகள் விரும்­பா­ததன் கார­ணத்­தி­னா­லேயே தற்­போது நாட்டில் குழப்­பங்கள் ஏற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவோ அல்­லது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை தூண்டும் வகை­யிலோ பொது­ப­ல­சேனா ஒரு­போதும் செயற்­பட்­ட­தில்லை. அதற்­கான ஆதா­ரங்­களும் இல்லை. தவ­றான வகையில் எம்மை சித்­த­ரிக்கும் முயற்­சியில் ஒரு­சில முஸ்லிம் அமைப்­புகள் செயற்­ப­டு­வதை நாம் பொருட்­ப­டுத்தப் போவ­தில்லை. நாட்டில் வளர்ந்து வரு­கின்ற முஸ்லிம் இன­வாத தீவி­ர­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது எம் அனை­வ­ரினதும் கடமை. அதை அர­சாங்கம் செய்யாவிட்­டாலும் நாட்டின்மீது அக்­க­றையுள்ள நாம் செய்வோம். அதற்­காக ஒரு­போதும் அப்­பாவி முஸ்லிம் மக்­களை அழிக்க மாட்டோம்.
இந்த நாட்டில் முஸ்லிம்­களை ஆதரித்து வாழ தயா­ரா­கவே உள்ளோம்.ஆனால் முஸ்­லிம்­களின் மனதில் பௌத்த தீவி­ர­வாதம் என்ற கருத்தை ஒரு சிலமுஸ்லிம் அமைப்­புகள் பரப்பி எம்மிடம் இருந்து வேறு­ப­டுத்தி வைக்­கின்­றனர்.
மேலும், பொது­ப­ல­சேனா அமைப்­பிற்கு எதி­ராக முஸ்லிம் கலா­சார திணைக்­களம் ஆதா­ரங்­களை சேக­ரிக்­கலாம். வழக்கு தொட­ரலாம். ஆனால் எம்மை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. முஸ்லிம் அமைப்­புகள் பௌத்­தத்தை விமர்­சிக்­கும்­போது பௌத்­தர்கள் கொந்­த­ளிக்­காது அமை­தி­யாக இருந்­தனர். நாம் நினைத்­தி­ருந்தால் முஸ்லிம் அமைப்பின் அக்­க­ருத்­திற்கு எதி­ராக கடு­மை­யாக செயற்­பட்­டி­ருக்க முடியும். ஆனால், நாம் அவ்வாறு செயற்படவில்லை. இப்போதும் முஸ்லிம் அமைப்புகள் எமக்கெதிராக எத்தனை வழக்குகள் தொடுத்து எம்மை குற்றவாளியாக்க நினைத்தாலும் நாம் அதற்கு முகம் கொடுக்க தயார். எம்மை ஒருபோதும் குற்றவாளியாக்கி விட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
Disqus Comments