Tuesday, July 8, 2014

இணையம் ஊடாக திருமணம் செய்வதாக உறுதியளித்து யுவதிகளை ஏமாற்றிய இருவர்­ கைது

இணை­யத்­தளம் ஊடாக நம்­பிக்­கை­யான சூழல் ஒன்றை உரு­வாக்கி திரு­மணம் செய்­து­கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்து யுவ­தி­களை ஏமாற்றி பண மோச­டியில் ஈடு­பட்­டு­வரும் திட்­ட­மிட்ட குழு ஒன்று தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ளனர். இதன் படி இந்தக் குழுவின் இரு நபர்­களை கைது செய்­துள்ள மாத்­தறை புல­னாய்வுப் பிரிவு அதன் தலை­வரை கைது செய்ய சர்­வ­தேச பொலி­ஸாரின் ஒத்­து­ழைப்பை நாடு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

யுவ­தி­களை திரு­மண ஆசை­காட்டி ஏமாற்றி பணம் பறிக்கும் இந்த திட்­ட­மிட்ட குழுவின் தலை­வ­ராக பிரித்தி விராஜ் ரத்நா­யக்க அல்லது பிரித்தி விராஜ் அம­ர­சிங்க என்ற நபரை அடை­யாளம் கண்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண அவர் தற்­போது மலே­ஷி­யாவில் உள்­ள­தாக தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் சர்­வ­தேச பொலி­ஸா­ருக்கு சிவப்பு அறி­வித்தல் ஒன்றை வழங்­கு­வதன் ஊடாக அவரை கைது செய்ய எதிர்ப்­பார்த்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.
அத்­துடன் பிர­தான சந்­தேக நபரின் இரு வேறு ஆண்­டு­களில் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை கேச­ரிக்கு வழங்­கிய அவர் திரு­மண யோச­னைகள் தொடர்பில் குறிப்­பாக இணைய திரு­மண யோச­னைகள் குறித்தும் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு பொது­மக்­க­ளுக்கு வேண்­டுகோள் விடுத்தார்.
மாத்­தறை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் காரி­யா­ல­யத்­துக்கு கடந்த மே மாதம் 21 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற முறைப்­பாடு ஒன்றை விசா­ரணை செய்த போதே இந்த திட்­ட­மிட்ட குழு தொடர்­பான விட­யங்கள் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ளன. மாத்­தறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் தேச­பந்து தென்­ன­கோனின் விசேட அறி­வு­றுத்­த­லுக்கு அமைய மாத்­தறை புல­னாய்வுப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் பாத்­திய ஜய­சிங்­க­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட விசேட விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த விடயம் அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது.
வெலி­கம பொலிஸ் பிரிவில்,யட்­டி­கல, மிரிஸ்ஸ பகு­தியை சேர்ந்த பெண்­ணொருவர் பிலி­யந்­த­லையில் நடத்­தி­வந்த திரு­மண சேவைகள் நிறு­வனம் ஒன்­றி­னூ­டா­கவே தக­வல்கள் பெறப்­பட்டு இந்த மோசடி நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
குறித்த திரு­மண சேவைகள் நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ளரை ஸ்கைப் மற்றும் மின்­னஞ்சல் ஊடாக தொடர்­பு­கொண்டு திரு­மணம் குறித்து கூறி யுவ­தி­களின் தொலை­பேசி இலக்கம் மற்றும் வீட்டு தொலை­பேசி இலக்­கங்­களைப் பெற்றே இந்த திட்­ட­மிட்ட குழு மோசடி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டு­வந்­துள்­ளது. முதலில் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்ள முறைப்­பாட்டில், இணையம் ஊடாக தொடர்­பு­கொண்டு திரு­மணம் முடிப்­ப­தாக தொடர்­பினை வளர்த்­துள்ள நபர் ஒருவர், குறித்த பெண்­ணுக்கு பரிசு ஒன்றை அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அதனை பெற சுங்கப் பிரி­வுக்கு நான்கு இலட்­சத்து 78 ஆயி­ரத்து 620 ரூபா செலுத்த வேண்டும் எனக் கூறி பண மோசடி செய்­த­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இந்த முறைப்­பாட்­டுக்கு அமைய வங்­கிக்­க­ணக்­குகள் மற்றும் தொலை­பேசி இலக்­கங்­களை மையப் ப­டுத்­தி­ய­தாக மேற்­கொள்­ளப்பட்­டுள்ள விசா­ர­ணை களில் சந்­தேக நபர்கள் இருவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட் டுள்­ளனர்.
Disqus Comments