இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் நடத்தப்படும் விசாரணைகளை மூன்று நாடுகளிலிருந்து மேற்கொள்வதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எவ் வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.
சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதியளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த விசாரணைக்குழு தொடர்பில் முன்னதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என இலங்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடாது என இலங்கையில் எவ்வித சட்டங்களும் கிடையாது என்ற போதிலும், சாட்சிமளிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில் சாட்சியாளர்களின் பெயர் விபரங்கள் இருபது ஆண்டுகளுக்கு இரகசியமாக பேணப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.
சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதியளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த விசாரணைக்குழு தொடர்பில் முன்னதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என இலங்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடாது என இலங்கையில் எவ்வித சட்டங்களும் கிடையாது என்ற போதிலும், சாட்சிமளிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில் சாட்சியாளர்களின் பெயர் விபரங்கள் இருபது ஆண்டுகளுக்கு இரகசியமாக பேணப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
