கொழும்பில் இருந்து கொண்டுவரப்படுகின்ற குப்பை கூளங்களை புத்தளம் அருவக்காட்டு பிரதேசத்தில் கொட்டுவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய செயற்திட்டத்தினை எதிர்க்கும் முகமாகா புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (14-10-2016) நடைபெற்றது.
குறித்த எதிர்ப்புப்பேரணி ஜும்மாத்தொழுகையினை அடுத்து புத்தளம் நகர பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை புத்தளத்திலுள்ள அனைத்து மத அமைப்புக்கள் மற்றும் புத்தளம் வாழ் இளைஞர் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
