இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் இன்று அதிகாலை பஸ் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ ஏற்பட்டுள்ளது.
கோதக்கோட்டா பிரதேசத்தில் பஸ் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் வீதியின் நடுவே இருந்த தடுப்பில் பஸ் மோதியதாகவும் இதன்போது எரிபொருள் தாங்கி வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் உறக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென பஸ்ஸில் தீ ஏற்பட்டதால் தப்பிக்க வழியின்றி பயணிகள் உடல் கருகி பலியானதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், பஸ்ஸின் சாரதி, நடத்துனர் உள்ளிட்ட 49 பேர் பயணித்துள்ளதாகவும், தீக்காயங்களுக்கு உள்ளானவர்கள் வானாபார்தி வைத்தியசாலயைில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ ஏற்பட்டுள்ளது.
கோதக்கோட்டா பிரதேசத்தில் பஸ் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் வீதியின் நடுவே இருந்த தடுப்பில் பஸ் மோதியதாகவும் இதன்போது எரிபொருள் தாங்கி வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் உறக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென பஸ்ஸில் தீ ஏற்பட்டதால் தப்பிக்க வழியின்றி பயணிகள் உடல் கருகி பலியானதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், பஸ்ஸின் சாரதி, நடத்துனர் உள்ளிட்ட 49 பேர் பயணித்துள்ளதாகவும், தீக்காயங்களுக்கு உள்ளானவர்கள் வானாபார்தி வைத்தியசாலயைில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.