Wednesday, October 30, 2013

இலங்கையில் ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம்

இலங்கையில் ஒவ்வொரு ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்று நினைவு கூறப்படும் உலக பக்கவாத நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மூளையில் ஒரு பகுதி பாதிப்புக்குள்ளான நிலையில் இந்த நோய் ஏற்படுகிறது.

இந்த நோய்க்கு உள்ளாகும் மூன்று பேரில் ஒருவர் பலியாவதுடன், மூன்று பேரில் ஒருவர் செயற்பாட்டை இழக்கின்றனர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Disqus Comments