(TM) கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா
செய்துள்ளதையடுத்து கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர்
நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான தாருஸல்லாமில் நடைபெற்றுகொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட கல்முனை மேயர் பதவியை சிராஸ் மீராசாஹிப் தனது இரண்டு வருடங்கள் நிறைவில் இன்று வெள்ளிக்கிழமை இராஜினாமா செய்துகொண்டர்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தினை அமைச்சர் ஹக்கீமின் வீட்டில் வைத்தே இன்று கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.
கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து செயற்பட முடியாது எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ் மீராசாஹிப்க்கு ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கட்சியின் தலைமையகமான தாருஸல்லாமில் நடைபெற்றுகொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட கல்முனை மேயர் பதவியை சிராஸ் மீராசாஹிப் தனது இரண்டு வருடங்கள் நிறைவில் இன்று வெள்ளிக்கிழமை இராஜினாமா செய்துகொண்டர்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தினை அமைச்சர் ஹக்கீமின் வீட்டில் வைத்தே இன்று கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.
கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து செயற்பட முடியாது எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ் மீராசாஹிப்க்கு ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
